உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

பண்ருட்டி :

                பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம், எல்.என்.புரம் ஊராட்சியில் பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

                 ஊராட்சி தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இதில் ஒன்றிய அலுவலக பிரதிநிதி கோதண்டபாணி, ஊராட்சி உதவியாளர் பாலமுருகன், மக்கள் நலப் பணியாளர் சரவணபாலன், உறுப்பினர்கள் லூர்துமேரி, பூபதி, வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். எல்.என்.புரம் ஊராட்சி சார்பில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஊராட்சி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். உறுப்பினர் சுதாமன், விஜயலட்சுமி, கோவிந்தராஜ், மலர்பூவன் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior