உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

பரங்கிப்பேட்டை கடற்கரையில் இறந்து கிடந்தவர் அண்ணாமலை பல்கலை., இன்ஜினியரிங் மாணவர்

பரங்கிப்பேட்டை :

              பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் இறந்து கிடந்தவர் அண்ணாமலை பல்கலை இன்ஜினியரிங் மாணவர் என தெரியவந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கடற் கரையில் கடந்த 14ம் தேதி அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

                 இதுகுறித்து கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப் பேட்டை சப் இன்ஸ் பெக் டர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வந்தார். வாலிபரின் உடல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் இறந்து கிடந்த வாலிபர் நெய் வேலி பெரியாகுறிச்சி ஐ.பி.ஐ., நகரை சேர்ந்த சந்திரன் மகன் மனோபாலன் என்றும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்றும் தெரியவந்தது. அதையடுத்து மனோபாலனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.மனோபாலன் பொங்கலுக்கு அவரது வீட்டிற்கு வருவதாக பெற்றோரிடம் போனில் தகவல் தெரிவித் துள்ளார். அதற்குள் பொங் கல் அன்று மனோபாலன் புதுக்குப்பம் கடற்கரையோரம் இறந்து கிடந்தார். அவரது இறப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதையொட்டி மனோபாலன் எப்படி இறந்தார், அவருடன் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior