உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

காங்., தமிழகத்தில் முதல் நிலை பெற வேண்டும்: மத்திய அமைச்சர் வாசன் விருப்பம்

பண்ருட்டி :

                      ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் ஆயிரம் கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது என மத்திய அமைச்சர் வாசன் கூறினார். பண்ருட்டியில் வாழப்பாடி ராமமூர்த்தியின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட காங்., தலைவர் நெடுஞ் செழியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மணி வரவேற்றார். புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கோவிந்தராஜ், முன் னாள் எம்.எல்.ஏ.,க்கள் வேலுசாமி, முத்தழகன், தாமேதரன் உள் ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

              மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது: மறைந்த தலைவர்கள் மூப்பனாரும், வாழப்பாடியாரும் தமிழகத் தில் காங்., கட்சிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துள்ளனர். தமிழகத்தில் 43 ஆண்டுகள் காங்., ஆட்சியில் இல்லை என்றாலும், பிற கட்சிகளின் வெற்றியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளது. அதை மாற்றி காங்., தமிழகத்தில் முதல் நிலை பெற வேண்டும். இன்று இந்திய அளவில் சோனியா தலைமையில் வலுவான இயக்கமாக காங்., உள்ளது. 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்து சோனியா வழி நடத்தினார். அதனை மக்கள் ஏற்று கொண்டு 2004ல் மன்மோகன் தலைமையில் காங்., ஆட்சி அமைந்தது. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால் 2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் காங்., தலைமையிலான ஆட்சி அமைய மக்கள் ஆதரவளித்தனர்.

                          தற்போது மத்திய அரசு கல்விக்காக 34 ஆயிரத்து 400 கோடி நிதியும், சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு 13 ஆயிரத்து 200 கோடி ரூபாயும், உயர்கல்வி திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி ரூபாயும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 39 ஆயிரத்து 100 கோடி ரூபாயும், சிறுபான்மை நலன் மேம்பாட்டிற்கு ஆயிரத்து 740 கோடியும், நகர்புற வளர் ச்சிக்கு 12 ஆயிரத்து 847 கோடியும், குடிசை இல்லாத நாடாக மாற்றிட 7 ஆயிரம் கோடியும், சுகாதாரத்திற்கு 21 ஆயிரத்து 113 கோடி ஒதுக்கியுள்ளது.

              ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் ஆயிரம் கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு புதிய திட்டம் செயல்படுத்த படவுள் ளது. மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ராகுல்காந்தி வருகைக்கு பின் கட்சியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்கிற லட்சியம் நிறைவேற வேண்டுமெனில் கிராம, வட்டார, மாவட்ட, மாநகரங்களில் கட்சியில் அடிப்படை தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்படிப்பட்ட நல்லநிலை ஏற்பட்டால் தமிழகத்தில் காங்., கட்சி முதல் நிலை பெற வாய்ப்பு ஏற்படும் என்றார்.

                   முன்னதாக விழாவிற்கு வந்த மத்திய அமைச்சருக்கு பண்ருட்டி நகர எல்லையான பூங்குணத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பஞ்சவர்ணம், முன்னாள் எம்.எல். ஏ., ஜெயசந்திரன், துணை சேர்மன் கோதண்டபாணி, வேலுமணி, ராஜன், ஞானசேகரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior