உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

ஊதிய உயர்வு நிர்ணயம் செய்ய 'கட்டிங்': கூட்டுறவு பணியாளர்கள் அதிருப்தி

கடலூர் :

                 தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களிடம், புதிய ஊதிய நிர்ணயம் செய்ய, தனி அலுவலர் கள் சதவீத அடிப்படையில், "கட்டிங்' கேட்பதால், அனைத்து பணியாளர்களும் நொந்து நூலாகியுள்ளனர். தமிழகத்தில் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், 27 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர் களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து, ஏப்., 1, 2008 முதல் நிலுவைத் தொகை வழங்க, கடந்த 11ம் தேதி, அரசாணை பிறப்பிக்கப் பட்டது. ஏற்கனவே 7,000 கோடி ரூபாய் வரை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால், வறுமையில் வாடும் சங்கங்களின் நலன் கருதி, நிலுவைத் தொகையை, பணியாளர்களிடம் கொடுக்காமல், அவர்களின் வருங் கால வைப்பு நிதியில் சேர்க்க அறிவுறுத் தப்பட்டது. "இந்த பணத்தை வருங்கால வைப்பு நிதியில் சேர்க்க, ஒவ்வொரு பணியாளரும் 25 சதவீதம், "கட்டிங்' கொடுக்க வேண் டும்' என, தனி அலுவலர்கள், பணத்தை "கறந்து' வருகின்றனர்.

                 மாதந்தோறும் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய், சம்பளம் பெறும் தனி அலுவலர்கள், மிக குறைந்தபட்ச சம்பளமாக 2,500 ரூபாய் பெறும் பணியாளர்களையும் விட்டு வைப்பதில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. மேலிடத்தில் புகார் தெரிவித் தால், பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சத் தில் உள்ளனர்.  "விவசாய கடன் தள்ளுபடியால், சம்பளம் முழுமையாக பெற முடியாமல் தவித்தோம். தற் போது சம்பளம் கொடுத்து, அத்துடன் ஊதிய உயர்வு அளித் தும், அதிகாரிகளின் அடாவடித்தனத்தால், முழு பலனை அடைய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் உயர்த் தப் படும் டி.ஏ., விற்குத் தான், "கட்டிங்' கேட்டு கழுத்தை அறுக்கின்றனர் என்றால், வருங்கால வைப்பு நிதியில் சேர்ப் பதற்கு கூட கேட்கின்றனரே...' என தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர் கள், நொந்து நூலாகியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior