உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

நடராஜர் கோவிலில் மார்ச் 13ல் சிவராத்திரி

சிதம்பரம் :

                       சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரி குறித்த பொதுமக்களின் குழப்பத்தை தீர்க்க, பொது தீட்சிதர்கள் சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. விரோதி ஆண்டான இந்த ஆண்டு, வழக்கத்துக்கு மாறாக ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை, இரண்டு கிரகணங்கள் என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, மகா சிவராத்திரி கொண்டாடுவதிலும் மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிப்., 12ம் தேதியா, மார்ச் 13ம் தேதியா என்ற குழப்பம் நீடிக்கிறது.

              இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்ச் 13ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது என, பொது தீட்சிதர்கள் சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.பூலோக கயிலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில், மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை பூஜைகள் முடிந்த பிறகு, மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து விடிய, விடிய கால பூஜைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்படும். சிவ தொண்டர்கள், பொதுமக்கள் விரதமிருந்து திருமுறை பாராயணம் பாடியபடி சிவ ஜோதி எடுத்து மகா சிவாலய தரிசனம் நடக்கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior