உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

ஆசிரியர்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்சி

ஸ்ரீமுஷ்ணம் :

                    ஸ்ரீமுஷ்ணம் பகுதி ஆசிரியர்களுக்கு வில்லுப் பாட்டு, பொம்மலாட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது.  காட்டுமன்னார்கோவில் வட்டார வளமையம் சார்பில் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம், நாச்சியார் பேட்டை பள்ளி தொகுப் பாய்வு மையங்களில் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது.ஆசிரியப் பயிற்றுனர் பழனிமுத்து, கீதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் மூலம் கற்பிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் காமராஜ் இரண்டு மையங் களிலும் நடந்த பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டார். இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள 32 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior