உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

சமத்துவபுரங்களில் பெரியார் சிலை :மங்களூர், நல்லூரில் பணிகள் தீவிரம்

சிறுபாக்கம் :

                            மங்களூர், நல்லூர் ஒன்றிய சமத்துவபுரங்களில் பெரியார் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.  மங்களூர் ஒன்றியம் கழுதூர், நல்லூர் ஒன்றியம் ஐவதுகுடி பகுதிகளில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை அருகில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் பெரியார் சிலை இல்லாத சமத்துவபுரங்களில் உடனடியாக சிலை நிறுவ தமிழக அரசு உத்தரவிட்டது. 

                        இதனையடுத்து சென் னையிலிருந்து  கொண்டு வரப்பட்ட இரண்டு பெரியார் சிலைகளை சமத்துவபுரங்களில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய ஆணையர்கள் மங்களூர் ஜெகநாதன், நல்லூர் ரவிசங்கர்நாத் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior