உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

சாலையில் பைக் நிறுத்தி அடாவடிபரங்கிப்பேட்டையில் 'டிராபிக் ஜாம்'

பரங்கிப்பேட்டை :

                      பரங்கிப்பேட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக பைக்கை நிறுத்தி விட்டு எடுக்காததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பரங்கிப்பேட்டை சங்குமரத்தடியில்  இருந்து சின்னக்கடை தெரு வரை நெடுஞ் சாலைதுறை சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் அடிக்கடி போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சஞ் சீவிராயர்கோவில் தெருவில் உள்ள மளிகை கடையில் பொருள் வாங்க வந்த ஒருவர் பைக்கை ரோட்டில் நிறுத்தியிருந்தார். அப்போது எதிரெதிரே பஸ் கள் வந்தது. ஒதுங்க இடம் இல்லாததால் தனியார் பஸ் கண்டெக்டர், ரோட்டில் நிறுத்தியிருந்த பைக்கை எடுக்குமாறு கூறினார். அதற்கு அந்த நபர் பைக்கை எடுக்க முடியாது என கூறினர். அதனால் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டனர்.

                இதனால் அந்த வழியாக நடந்து செல்லவே முடியாத அளவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அதனை அறிந்த பைக் ஆசாமி அங்கிருந்து "எஸ்கேப்' ஆகினார். அதன்பிறகு போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் பரங்கிப்பேட்டை - சிதம்பரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior