உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

சிதம்பரம் பகுதிகளில் குடியரசு தின கொண்டாட்டம்

சிதம்பரம் :

                   சிதம்பரம் பகுதிகளில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் நகராட்சியில்  சேர் மன் பவுஜியாபேகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் ராமநதான், காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மாணவி லஷ்மிசுதா, வீனஸ் பள்ளியில் தாசில்தார் காமராஜ்,  ராமசாமி செட்டியார் பள்ளியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சீனு, ராமகிருஷ்ணா பள்ளியில் பேராசிரியர் வள்ளியப்பன், பச்சையப்பா பள்ளியில் ஆசிரியர் நடராஜன், ஆறுமுகம் நாவலர் பள்ளியில் அருள்மொழிச்செல்வன், சி.முட்லூர் கல் லூரியில் முதல்வர் (பொறுப்பு) சேரன் கொடியேட்டினர்.


                         மாரியப்பா நகர் சீனுவாச வாண்டையார் உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியர் சின்னதுரை, குஞ்சரமூர்த்தி வினாயாகர் கோவில்தெரு முருகன் தொடக்கபள்ளியில் நிர்வாகி ராஜராஜன், ஓரியண்டல் நர்சரி பிரைமரி பள்ளியில் மூசா, கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவகுமாரவேல் கொடியேற்றினர். அண்ணாமலைநகர் பேரூராட்சியில் சேர்மன் கீதா தேசியகொடியை ஏற்றிவைத்தார்.  அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தில்லை மெட்ரிக் பள்ளியில் கணேஷ், நத்தமேடு பள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் கலையரசி, சாத்தப்பாடிபள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் கலைச்செல்வி, வல் லம்படுகை பள்ளியில் ஊராட்சி தலைவர் கலையரசன், சிதம்பரம் நெல்லுக்கடை தெருவில் காங்., வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சித்தார்த்தன், இளமையாக்கினார் கோவில் தெருவில் மனித உரிமைகள் கழக  லோகநடேசன், காசுக்கடை தெருவில் காங்., மாவட்ட தலைவர் சச்சிதானந்தம் தலைமையில் தேசிய ஆசிரியர் சங்க பாலசுந்தரம் கொடியேற்றினர்.

                     சிதம்பரம் அடுத்த நான் முனிசிபல் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் ராஜேந்திரன் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பாலு, ஊராட்சி உதவியாளர் மணிமாறன் மற்றும் உறுப்பினர்கள் பஙகேற்றனர். மஞ்கொல்லையில் கிராமத் தில் செந்தில்வேலன் தலைமையில், பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் திருமுருகபொய்யாமொழி, பரங்கிப்பேட்டை ஒன் றிய அலுவலகத்தில் ஆணையர்  சுப்ரமணியன், பேரூராட்சியில் சேர்மன் முகமது யூனுஸ், கிள்ளை பேரூராட்சியில் சேர்ங மன் ரவிச்சந்திரன் கொடியேற்றினர்.

                       தச்சக்காடு பள்ளியில் ஊராட்சி தலைவர் கோபு, சின்னகுமட்டி பள்ளியில் ஊராட்சி தலைவர் நகப்பன், கொத்தட்டை பள்ளியில் ஊராட்சி தலைவர் பழனி, சிலம்பிமங்களம் பள்ளியில் ஊராட்சி தலைவர் சங்கர், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் துணைத் தலைவர் முருகானந்தம், த.வீ.செ. கல்வி நிறுவனங்களின் செயலா ளர் செந்தில்நாதன், எஸ்.பி.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தாளாளர் சவுந்திரராஜன் கொடியேற்றினார். மேல்புவனகிரி ஒன்றியத்தில் சேர்மன் தனலட்சுமி கலைவாணன் கொடி ஏற்றினார்.  மங்களம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்மணி, சுப்ரமணிய பாரதியார் மெட்ரிக் பள்ளியில் தலைமையில் ராஜேந் திர பிரசாத், அரசு மகளிர்பள்ளியில் தலைமை ஆசிரியர் காவேரி, ஆண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் அப்துல் நபி,  பு.சித்தேரி ஊராட்சியில் அதன் தலைவர் சச்சிதானந்தம் கொடி ஏற்றி வைத்தனர்.

                      காட்டுமன்னார்கோவிலில் தாலுகா அலுவலகத்தில் தாசில் தார் வீரபாண்டியன், ஒன்றிய அலுவலகத்தில சேர்மன் ஜெயச்சந்திரன், பேரூராட்சியில் சேர்மன் கணேசமூர்த்தி, குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மலர்மன்னன், லால் பேட்டையில் சேர்மன் சபியுல்லா கொடி ஏற்றினார். பூவிழந்தநல்லூர் பள்ளியில் ஊராட்சி தலைவர் திரிபுரசுந்தரி, குமராட் சியில் ஊராட்சி தலைவர் எழில்மதி, கலைமகள் பள்ளியில் முதல்வர் வீரமுத்துகுமரன் கொடி ஏற்றினார். சேத்தியய்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., ராமச் சந்திரன், சர்க்கரை ஆலையில் அலுவலக மேலாளர் நாராயணசாமி, பேரூராட்சி அலுவலகம் மற்றும் சந்திரா பெண்கள் பள்ளி மற்றும் வடக்குசென்னிநத்தம் பள்ளிகளில் சேர்மன் கணேசன், வீரமுடையாநத்தம் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாரி, அள்ளூர் பள்ளியில் ஊராட்சி தலைவர் ஞானமணி, காவாலக்குடி பள்ளியில் ஊராட்சி தலைவர் தனலட்சுமி கொடியேற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior