உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

அச்சுறுத்தும் சாலையோர தரைக் கிணறுகள் நான்கு வழிச்சாலையில் 'திக் திக்' பயணம்

திண்டிவனம் :

                      திண்டிவனத்திலிருந்து, புதுச்சேரி செல்லும் வழியில் சாலை ஓரம் உள்ள தரைக் கிணறுகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. விபத்துகள் ஏற்படும் முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் ஆர் ஜிதம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலங்களில் உள்ள தரைக் கிணறுகள் தற்போது சாலையை ஒட்டி அமைந்துள்ளன. திண்டிவனம் அடுத்துள்ள மொளசூர் கிராமம் அய்யனார் கோவில் அருகில் மூன்று தரைக் கிணறுகள் உள்ளன. இவை, திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி  செல்லும் சாலையின் இடது புறத்தில் உள்ளன. அவ்வழியே செல்லும் வாகனம் சாலையையொட்டி விலகினால், இந்த தரைக் கிணறுகளில் தான் விழ வேண்டிய அபாய நிலை உள்ளது.

                  தற்போது, இத்தரைக் கிணறுகள் உள்ள பகுதியில் சாலை அமைக்கும்  பணி நடைபெறுவதால், வழி மூடப்பட்டுள்ளது. இதனால், கிணறு உள்ள பக்கம் ஒரு சில வாகனங்களே வருகின்றன. நான்கு வழிச் சாலை பணி முடிவடைந்தால், வாகனங்கள் அதிகளவில் செல்லும்.  இதனால், தரைக் கிணறுகளால் விபத்துக்கள் ஏற்படும்.தற்போது, திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் பலர் இரு சக்கர வாகனங்களில் புதுச்சேரிக்கு செல்கின்றனர். ரோட்டை ஒட்டி செல்லும் வாகன ஓட்டிகள், சிறிது விலகினாலும் இந்த கிணறுகளில் தான் விழ வேண்டும். இந்த கிணறுகளால் விபத்து ஏற்படுவதற்கு முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior