உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

நெய்வேலி தி.மு.க.,வின் கோட்டை : அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

நெய்வேலி :

                   என்.எல்.சி., தொழிலாளர்கள் தான் ஆபத்து காலத்தில் உதவுபவர்கள் என தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.  நெய்வேலி நகர தி.மு. க., சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். தலைமை செயற் குழு உறுப்பினர் ராசவன் னியன், நகர தலைவர் சிவந்தான் செட்டி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வீரராமச்சந்திரன், தொ.மு.ச., பொது செயலாளர் கோபாலன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 
                      
                         நெய்வேலி நகரம் தி.மு.க.,வின் கோட்டை. என்.எல்.சி., தொழிலாளர்கள் தி.மு.க.,வின் தூண் களாக உள்ளனர். தி.மு.க., எதிர்கட்சியாக இருந்தபோதும் கூட தமிழகத்திலேயே அதிக ஓட்டு  வித்தியாசத்தில் அமைச்சர் பன்னீர் செல்வம் இந்த தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார். அந்த அளவிற்கு என்.எல்.சி., தொழிலாளர்கள் ஆபத்து காலத்தில் உதவினர்.நமது அரசியல் எதிரிகள் தேர்தலுக்கு தேர்தல் நம்மை அசைத்து பார்க்க முயன்றனர். ஆனால் இனி எப்பொழுதும் அசைக்க முடியாத அளவிற்கு கருணாநிதி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என பேசினார்.மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேசுகையில், தமிழை அழிக்க வேண்டும் என்று நினைத்தவர்களின் நினைப்பை அழித்தவர் அண்ணாதுரை. அவரது தளபதியாக இன்றளவும் விளங்கி வருபவர் கருணாநிதி. இயந்திர சொல்லாக இருந்த தமிழ் மொழி எழுத்து சொல்லாக மாறிய வரலாறு தமிழுக்கு உண்டு என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior