உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

இரண்டாம் நிலை காவலர் தேர்வு 203 பேருக்கு மருத்துவ சோதனை

கடலூர் :

                       கடலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியைத் தொடர்ந்து நேற்று முதல் மருத்துவ பரிசோதனை துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த அக்டோபர் 25ம் தேதி நடந்தது. பின்னர் உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 156 ஆண்கள், 47 பெண்கள் என 203 பேருக்கு மருத்துவ பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இதில்  30 பெண்கள் உட்பட 55 பேருக்கு நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 17 பெண்கள் உட்பட 56 பேருக்கும், 29ம் தேதி 49 ஆண்களுக்கும், 30ம் தேதி 43 ஆண்களுக்கும் பரிசோதனை நடக்கிறது.மருத்துவ பரிசோதனையில் தேர்வு பெறுபவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பயிற்சி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior