உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

குறிஞ்சிப்பாடி :

                 வடலூர் ஜோதி நகரில் உள்ள ஜோதி சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல் வம் உள்ளிட்டோர் பங் கேற்றனர். வடலூர் ஜோதி நகரில் உள்ள ஜோதி சுப்ரமணிய சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 25ம் தேதி மாலையில் கணபதி வேள்வி, நவக்கிரக வேள்வி நடந்தது. அன்று இரவு 8 மணிக்கு முதல் கால வேள்வி, பூர்ணாகுதி மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

               நேற்று முன்தினம் (26ம் தேதி) காலையில் புதிய திருமேனிகள் கரிக்கோலம், இரண்டாம் கால வேள்வியும் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு அருட்பா அகவல் பாராயணம், 7 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் சீர்வளர்சீர் குருமகா சன்னிதான சுவாமிகள், முத்துகுமாரசாமி தம்பிரான், மற்றும் சிங்காரவேல் குழுவினர் புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து மூலவர் சுப்ரமணிய சுவாமி கோபுர கலசத்திலும், நவக்கிரக சன்னதி கலசத்திலும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

                   கும்பாபிஷேகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், ஊரன் அடிகளார், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தெய்வ நிலையம் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், வடலூர் பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், காங்., சேவாதள தவைலர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior