உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு மூன்று மாதத்திற்கு பிறகு சம்பளம் வழங்கல்

விருத்தாசலம் :

                       கோமங்கலம் ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு இரண்டாம் கட்டமாக சம்பளம் நேற்று வழங்கப்பட்டது. விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சியில் கடந்த அக்டோபர் மாதம் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகள் நடந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த பலர் வேலை செய்தனர். அவர்களுக்கு சம்பளம் ஒரு பகுதி மட்டுமே வழங்கப் பட் டது. ஆனால் அரசிடம் இருந்து முழுத் தொகை பெறப்பட்டது.இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதமே கலெக்டரிடம் புகார் செய்யப்பட் டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந் நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சிலர் இந்த பிரச் னையை எழுப்பியதால் திடீர் சலசலப்பு ஏற்பட் டது.

           மேலும், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (28ம் தேதி) விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் வேலை செய்தவர்களுக்கு சேர வேண்டிய பாக்கி சம்பளத்தை வழங்கும் பணி நேற்று மாலை வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior