உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் 28ம் தேதி பூவராகசாமி தீர்த்தவாரி

கிள்ளை : 

         கிள்ளையில் வரும் 28ம் தேதி ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி பங்கேற் கும் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. சிதம்பரம் அடுத்த கிள்ளையில் வரும் 28ம் தேதி நடைபெறும் மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது சுற்ற வட்டார கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்பது சிறப்பாகும். அன்று இரவு கிள்ளையில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்து பக்தர்களுக்கு தரிசனத்திற்காக பூவராகசாமி அலங்காரத்தில் வைக்கப்படும்.  முன்னதாக இந்து முஸ்லிம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிள்ளை தைக்கால் தர்காவில் வரவேற்பு அளிக்கப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior