உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

மார்ச் 5ம் தேதி மறியல் : இந்திய கம்யூ., முடிவு

திட்டக்குடி : 

            விலைவாசி உயர் வைக் கண்டித்து மார்ச் 5ம் தேதியில் நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டக்குடி வந்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது. திட்டக்குடி வட்ட இந்திய கம்யூ., கிளை கூட்டம் வட்டக்குழு சின்னதுரை தலைமையில் நடந்தது. வட்டக்குழு முருகையன், பொருளாளர் பரமசிவம், துணை செயலாளர் சண்முகம், மாயவன், சாமிவேல், லட்சுமணன் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், வட்ட செயலாளர் மகாலிங்கம், கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் ரங்கசாமி விளக்கி பேசினர். கூட்டத்தில் புதிய வட்ட துணை செயலாளர்களாக முருகையன், சின்னதுரை தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் விலைவாசி உயர்வு குறித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் மார்ச் 5ம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டத்தையொட்டி வேப்பூரில் அருள்மணி, ராமநத்தத்தில் மாயவன், திட்டக்குடியில் பரமசிவம், பெண்ணாடத்தில் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior