உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

கோ-கோ போட்டியில் வள்ளலார் பள்ளி முதலிடம்

சேத்தியாத்தோப்பு : 

            கோ-கோ போட்டியில் வளையமாதேவி வள்ளலார் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். நல்லாசிரியர் கோதண்டராமன் நினைவு கோ-கோ போட்டி வளையமாதேவி வள்ளலார் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, வடலூர், வடக்குப்பாளையம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வளையமாதேவி வள்ளலார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் ராமலிங்கம் பரிசு வழங்கினார். உதவி தலைமையாசிரியர் மனுநீதிசோழன், உடற்கல்வி ஆசிரியர் ரங்கசாமி கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior