உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

விருத்தாசலம் அரசு பள்ளியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடந்தது. காக்கும் பணியில் 100 ஆண்டு என்ற தலைப் பில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மல்லிகாஜாஸ்மின் தலைமை தாங்கினார். நிலைய அலுவலர் பழனிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கலையரசன் வரவேற்றார். கோட்ட அலுவலர் சுப்ரமணி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். நிலைய அலுவலர்கள் ஆறுமுகம், குணசேகரன், செல்வராஜ், என்.சி.சி., ஆசிரியர் ராஜ்குமார், என்.எஸ்.எஸ்., ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர் பாலசுப்ரமணியன் உட் பட பலர் கலந்து கொண் டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior