உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

பல்கலைக்கழக தேர்வில் சாதனை : ஜவகர் கல்லூரி மாணவிக்கு பரிசு

நெய்வேலி : 

                  பல்கலைக்கழக தேர்வில் மூன்றாம் இடத்தை பெற்ற நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவியை பாராட்டி சான்றிதழ் வழங்கப் பட்டது.

              நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை 2ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக் கான 3 நாள் தொழில் நுட்ப பயிற்சி முகாம் என்.எல். சி.,யின் செயல் முறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் நடந்தது. என்.எல்.சி., பொது மேலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். என்.எல்.சி., துணை பொது மேலாளர் சந்தானம் மற்றும் கல்லூரி முதல்வர் மருதூர் அரங்கராசன் முன்னிலை வகித்தனர். முகாமில் என்.எல்.சி., நிறுவனத்தின் செயல் முறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத் தில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்ப வேதியியல் உபகரணங்களி ன் செயல்முறை விளக்கமும் பயன்பாடுகளும் மாணவர்களுக்கு விளக்கப் பட்டன.இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நடந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முதுநிலை வேதியியல் துறை தேர்வில் மூன்றாம் இடம் பிடித்த ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவி அகிலா மற்றும் ஆறாம் இடம் பிடித்த கவிதா ஆகியோருக்கு என்.எல்.சி., பொது மேலாளர் வேதகிரி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior