உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

கொள்ளிடம் ஆற்றில் பாலம் ஆயத்த பணிகள் தீவிரம்

காட்டுமன்னார்கோவில் : 

             காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் 43 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.கடலூர்- நாகை மாவட்டத்தை இணைக் கும் வகையில் காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் அருகே கொள்ளிடத்தில் 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுவதற்காக பூமி பூஜை கடந்த 27ம் தேதி நடந்தது. அதனை தொ டர்ந்து சேத்தியாத்தோப்பில் இருந்து முட்டம் வரை சாலை அகலப்படுத்தி தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாலம் கட்ட ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக ஆற்றில் பில்லர் அமைப்பதற்கான தளவாட பொருட் களை கொண்டு செல்வதற்காக ஆற்றில் செம்மண் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் காட்டுமன்னார் கோவிலில் இருந்து அரை மணி நேரத்தில் நாகை மாவட்டம் செல்ல முடியும் என்பதால் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுபுற பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior