உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மறியல் கம்யூ., கட்சியினர் 1729 கைதாகி விடுதலை

கடலூர் : 

                      அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டத்தில் பல இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய மற்றும் மா.கம்யூ.,கட்சியினர் 453 பெண்கள் உட்பட 1729 பேரை போலீசார் கைது செய்தனர்.

                            கடலூர் உழவர் சந்தை அருகில் சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் சந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர் கருப்பையா, ஆளவந்தார், குமார், தட்சிணாமூர்த்தி, பாபு, சாவித்திரி உள்ளிட்ட 94 பேரும், 

                             அண்ணா பாலம் அருகில்  ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொது செயலாளர் சேகர் தலைமையில் மாரியப்பன், சம்பந்தம், குளோப், பண்டரிநாதன் உள்ளிட்ட 150 பேர் மறியல் செய்தனர். 

                     விருத்தாசலத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் உள்ளிட்ட 75 பேர் கடை வீதியிலும், சி.ஐ.டி.யூ.,வினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையில் 135 பேர் பஸ் நிலையம் முன்பு மறியல் செய்தனர். 

                      கார்குடல் கிராமத்தில் ஏ.ஐ.டி. யூ.சி., வட்ட செயலாளர் பழனிவேல் தலைமையில் 34 பேரும், 

                      கம்மாபுரத்தில் சி.ஐ.டி.யூ., பரமசிவம் தலைமையில் 35 பேரும் மறியல் செய்தனர். 

                      சிதம்பரத்தில் மா.கம்யூ., மூசா தலைமயில் 91 பேரும், 

                      புவனகிரியில் ஏ.ஐ.டி.யூ.சி., வீரப்பன் தலைமையில் 83 பேரும், 

                      பரங்கிப் பேட்டையில் வல்லரசு தலைமையில் 20 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.
                    திட்டக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., பரமசிவம், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட 26 பேரும், 

                        ராமநத்தம் மின் வாரிய அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்க வட்ட துணை செயலாளர் மாயவன் உள்ளிட்ட 28 பேர் மறியல் செய்தனர். 

                        பெண்ணாடம் தபால் நிலையம் முன் மாவட்டக்குழு நாராயணசாமி, கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் ரங்கசாமி உள்ளிட்ட 10 பேரும், 
     
                            வேப்பூரில் அருள்மணி, சுப்ரமணியன் உள் ளிட்ட 15 பேர் மறியல் செய்தனர்.
                             பண்ருட்டி தபால் நிலையம் முன் ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொருளாளர் பழனிவேல் தலைமையில் 37 பெண்கள் உட்பட 176 பேரும், 

                           திருவதிகை தபால் நிலையம் முன் குணசேகரன் தலைமையில் 4 பெண்கள் உட்பட 44 பேரும், 

                           தட்டாஞ்சாவடியில் பன்னீர்செல்வம் தலைமையில் 20 பெண்கள் உள்பட 56 பேரும், 

                            காடாம்புலியூரில் சரவணன் தலைமையில்  17 பெண்கள் உள்பட 68 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.
                             மங்களம்பேட்டை    கலிபெருமாள் தலைமையில் 27 பேரும்,
                           
                        மந்தாரக்குப்பத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., மாநில குழு உறுப்பினர் முத்துவேல் தலைமையில் 186 பேரும், 

                            வடலூரில் மாவட்ட துணை தலைவர் ராமலிங்கம்  தலைமையில் 59 பேரும் மறியலில் ஈடுபட்டனர். 

                             சேத்தியாத்தோப்பில்    ஏ.ஐ.டி. யூ.சி., வட்ட செயலாளர் மகாலிங் கம் சார்பில் 36 பேரும்,
                                  
                            எறும்பூரில் வட்டக்குழு குமார் தலைமையில் 21 பேரும்,

                       ஒரத்தூரில் விவசாய தொழிலாளர் சங்கம் அன்பழகன் தலைமையில் 32 பேரும், 

                        ஸ்ரீமுஷ் ணத்தில் கலியமூர்த்தி தலைமையில் 43 பேரும், 

                       சோழதரத்தில் வட்ட செயலளர் ராஜீ தலைமையில் 36 பேரும், 

                        பழஞ்சநல்லூரியில் ராமலிங்கம் தலைமையில் 24 பேரும், 

                      காட்டுமன்னார்கோவிலில் சி.ஐ.டி.யூ., சார்பில் இளைபெருமாள் தலைமையில் 50 பேர் மறியலில் ஈடுபட்டனர். 


            மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட்டவர் களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior