உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

ஜெர்மன் நாட்டு சிறுமியை தீட்சிதர் அடித்ததாக புகார்

சிதம்பரம் : 

              சிதம்பரம் நடராஜர் கோவிலிலுக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு சிறுமியை தீட்சிதர் ஒருவர் அடித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி ஜெர்மன் நாட்டை சேர்ந்த மில்டன் தெர்க்கார். இருவரும் குடும்பத்துடன் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் தமிழகத்திற்கு சுற்றுலா வருவது வழக்கம். சில நாட்களுக்கு முன் தங்களது மூன்று பெண் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தனர். மகாபலிபுரம், ஆரோவில் பகுதிகளுக்கு சென்று நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.சாமி தரிசனம் செய்துவிட்டு உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது அவர்களது 10 வயது மகள் ஜெனனியை, மணிகண்டன் என்ற தீட்சதர் தலையில் அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழுதபடி பெற்றோரிடம் ஓடிவந்தது. குழந்தையை ஏன் அடித்தீர்கள் என மணிகண்டன் தீட்சிதரை கேட்டபோது அருகில் இருந்த நவதாண்ட தீட்சதரும் சேர்ந்து ஜெர்மன் தம்பதியினரை தாக்க வந்தனர். பயந்துபோன அவர்கள் நேராக கோவில் செயல் அலுவலர் அலுவலகம் வந்து புகார் தெரிவித்தனர். நடந்த சம்பவத்தை மனுவாகவும் எழுதி கொடுத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior