உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

நடராஜர் கோவில் தேர்களுக்கு துருப்பிடிக்காத உலோக 'ஷெட்'

சிதம்பரம் : 

              சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு துருப்பிடிக்காத உலோகத்தால் ஆன ஷெட் அமைக்கப் பட்டு வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி வலம் வரும் ஐந்து தேர்கள் உள்ளன.  ஆண்டுக்கு இரு முறை நடக்கும் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய தரிசன விழாக்களின்போது இந்த தேரோட்டம் நடக்கும். அதன்பிறகு கீழ வீதியில் உள்ள தேர் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.  தற்போது சென்னையை சேர்ந்த கோவில் கட்டளைக்காரர்கள் மூன்றுபேர் சேர்ந்து தேருக்கு துருப்பிடிக்காத உலோகத்தால் ஆன ஷெட் அமைக்க முன் வந்தனர்.  அதன்படி முதற்கட்டமாக பெரிய தேரான நடராஜர் தேருக்கு 2 லட்சம் ரூபாய்  ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior