உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

என்எல்சி தொழிற்சங்க நிர்வாகி ​ உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

நெய்வேலி:

                   என்எல்சி தொழிற்சங்க நிர்வாகியான செல்வராஜ்,​​ தலைமை அலுவலக ஊழியர் ஜவகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். என்எல்சி நிறுவனத்தில் இயங்கிவரும் டிடியுசி தொழிற்சங்கத்தின் தலைவராக இருப்பவர் செல்வராஜ்.​ இவர் கடந்த மாதம் நெய்வேலியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்று நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.​ மேலும் இதே கூட்டத்தில் பங்கேற்ற ஜவகர் என்பவரும் அவதூறாக பேசினார் எனக் கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவலறிந்த என்எல்சி நிர்வாகம் நிறுவன நிலை ஆணைகளின்படி வெள்ளிக்கிழமை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior