உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

கரை ஒதுங்கிய திமிங்கிலம்

கடலூர் : 

                கடலூர் சில்வர் பீச்சில் இறந்து கரை ஒதுங்கிய அறிய வகை திமிங்கிலத்தை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் புதைத்தனர். கடலூர் சில்வர் பீச்சில் நேற்று காலை அறியவகை  திமிங்கிலம் இறந்து கரை ஒதுங்கியது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் துரைசாமி, வனச் சரகர்கள் பன்னீர்செல்வம், சீனுவாசன் ஆகியோர் திமிங்கிலத்தை பார்வையிட்டனர். மீன் வளத்துறை உதவி இயக்குனர் இளம்பரிதி, பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரின ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன், பேராசிரியர் ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பிரேத பரிசோதனைக்குப்பின் புதைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior