உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

இளைஞர் காங்., வேட்புமனு தாக்கல்


கடலூர் : 

                     கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் 500 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடலூர் டவுன்ஹாலில் நடக்கிறது.  இதற்கான மனு தாக்கல் கடலூரில் மாவட்ட காங்., அலுவலகத்தில் நேற்று நடந்தது.  500 பேர் மனு தாக்கல் செய்தனர்.  மனுக்களை தொகுதி பொறுப்பாளரும் தேர்தல் அதிகாரியுமான ரவி பெற்றார். எம்.பி.,  செய்தி தொடர்பாளர் குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,  தண்டபாணி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இன்றும், நாளையும் மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது.  

                           சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்கான இளைஞர் காங்., தேர்தலில் போட்டியிட நேற்று மனு தாக்கல் நடந்தது. சிதம்பரம் தொகுதிக்கு 927 பேர் மனு தாக்கல் செய்தனர். அதனை தேர்தல் அதிகாரி ரமேஷ் பெற்றார்.  காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்கு 700 பேர் மனு தாக்கல் செய்தனர். அதனை தேர்தல் அதிகாரி கிரிஜா பெற்றுக்கொண்டார்.  மனுக்கள் இன்று (6ம் தேதி) பரிசீலிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior