உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

சிதம்பரம், கடலூரில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                      பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் சிதம் பரம், கடலூரில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித் தும், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் முன் னாள் முதல்வர் ஜெ., உத்தரவின்படி மேற்கு  மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிதம்பரம் மேல வீதியில் முன்னாள் அமைச்சர் கலை மணி தலைமையிலும், கிழக்கு மாவட்டம் சார்பில் கடலூர் உழவர் சந்தை முன்பு  மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயாலாளர்கள் அருண்மொழித்தேவன் , சம்பத் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior