உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

பெருகி வரும் குற்றங்களை கட்டுப்படுத்த புவனகிரிக்கு கூடுதல் போலீசார் தேவை

புவனகிரி :

             புவனகிரி பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

            புவனகிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என மொத்தம் 37 பேர் பணிபுரிந்து வந்தனர்.  காலப்போக்கில் போலீசாரின் எண்ணிக்கை 20 ஆக குறைந்தது. தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒற்றை இலக்கமாக குறைந்துவிட்டது. புவனகிரி அருகே சமீபத்தில் போலி மதுபான தொழிற் சாலை கண்டுபிடிக்கப் பட்டதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஒரு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பாதி பேர் கோர்ட் மற்றும் இதர பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர். அதனால் தற்போது 2 ஏட்டு, பாராவிற்கு போக  மூன்று போலீசார் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் பொதுமக்களின் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெருகிவரும் குற்றங்களை தடுக்க போலீசாரின் எண் ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior