உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியம் பயனாளிகளுக்கு வழங்க கோரிக்கை

பரங்கிப்பேட்டை :

             பரங்கிப்பேட்டை பகுதி முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியகுமட்டி ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

           பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியகுமட்டி ஊராட்சியில் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளை தேர்வு செய்து கிராம சபை ஒப்புதலுடன் சிதம்பரம் துயர் துடைப்பு தாசில்தாருக்கு மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்து 6 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எந்த விசாரணையும் செய்யவில்லை. பயனாளிகள் அனைவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  வறுமை கோட் டிற்கு கீழ் உள்ளவர்கள். இந்த ஓய்வூதிய நிதி வழங்கப்பட்டால் பயனாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதனால் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior