உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

அரசு ஐ.டி.ஐ., விளையாட்டு போட்டிகளில் கடலூர் மாணவர் ஸ்ரீதர் சாம்பியன் பட்டம்

கடலூர் :

                அரசினர் தொழிற்பயிற்சி மைய திருச்சி மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் கடலூர் மாணவர் ஸ்ரீதர் தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்றார்.

                   திருச்சி மண்டலத்திற்குட்பட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்களுக் கிடையேயான இரண்டு நாள் விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. இதில் திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருக்குவளை, நீடாமங் களம், அரியலூர், பெரம்பலூர், ஆண்டிமடம், உளுந்தூர்பேட்டை, சிதம்பரம், சங்கராபுரம், கடலூர் உள்ளிட்ட 12 தொழிற்பயிற்சி மையங்களைச் சேர்ந்த 600 மாணவர்கள் பங்கேற்றனர்.

             முதல் நாள் நடந்த கைப்பந்து போட்டியில் கடலூர் ஐ.டி.ஐ.,யும், கால்பந்து, பூப்பந்து போட்டிகளில் தஞ்சாவூர் ஐ.டி.ஐ., மாணவர்களும் முதலிடம் பெற்றனர். இரண்டாம் நாள் நடந்த தடகள போட்டிகளில் கடலூர் அரசு ஐ.டி.ஐ., வெல்டர் பிரிவு மாணவர் ஸ்ரீதர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றார். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஈ.ஐ.டி., பாரி மேலாளர் தங்கதிருப்பதி, டான்பேக் மேலாளர் சீனிவாசன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

                     நிகழ்ச்சியில் ஐ.டி.ஐ., முதல்வர்கள் கடலூர் அப்துல்கரீம், சங்கராபுரம் ஆர்லிக் செல்லதுரை, உளுந்தூர்பேட்டை சந்திரசேகர், தஞ்சாவூர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.      போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையில் வரும் 25ம் தேதி நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற் கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior