உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா

கடலூர் :

                கடலூர் கூத்தப்பாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் பெற்றோர் தின விழா நடந்தது.

           புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை அற்புதமேரி தலைமை தாங்கினார். புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் புதிய பள்ளி கட்டடத் திற்கு சிறப்பு ஆராதனை நடத்தினார். புதுச்சேரி இமாகுலேட் மதர் சுப்ரியர் ஜான் பிரிட்டோ மேரி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். மாலையில் நடந்த பெற்றோர் தின விழாவிற்கு  கல்வி ஆலோசகர் டையஸ்கோர மேரி அல்போன்சா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை அற்புத மேரி, புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட  அன்னை மரியா எபிபெனி முன்னிலை வகித்தனர். பாதிரிக்குப்பம்  ஊராட்சி தலைவர் கோமதி, சிவலிங்கம், திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்த்திப் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பள்ளியின் பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் ரமேஷ் பரிசு வழங்கினார். மூத்த ஆசிரியர் விஜயலட்சுமி நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior