உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

நெல் கொள்முதல் நிலையத்தால் தொழுதூர் நகர மக்கள் அவதி

ராமநத்தம் :

             தொழுதூரில் குடியிருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

               தொழுதூர் சிவன் கோவில் எதிரில் கடந்த ஜனவரி 28ம் தேதி நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி 200 மூட்டை நெல் விற்பனைக்கு வருகிறது. விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கோவில் வளாகத்தில் மெஷின் வைத்து தூற்றுவதால் நெல் பதர் மற்றும் வைக்கோல் துகள்கள் காற்றில் பறக் கும் போது அருகில் உள்ள வீடுகள், கோவில், தெருக்களில் செல்பவர் கள் மீது படிகிறது. சில நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் தூசி படிவதால் நிலை தடுமாறி விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே, குடியிருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior