உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

அரசு பங்க்கில் டீசல் இல்லாததால் பரங்கிப்பேட்டை மீனவர்கள் பாதிப்பு


பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டை அரசு பங்க்கில் நான்கு நாட்களாக டீசல் இல்லாததால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
                பரங்கிப்பேட்டை அன் னங்கோவில் பகுதியில் உள்ள அரசு டீசல் பங்க்கில் பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, எம்.ஜி. ஆர்., திட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு கட்டுவலை படகு வைத்துள்ளவர்களுக்கு 30 லிட்டரும், சாதாரண படகு வைத்துள்ளவர்களுக்கு 10 லிட்டரும் மான்ய விலையில் டீசல்  வழங்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக பங்க் கில் டீசல் இல்லாததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக் கப்பட்டு வருகின்றனர். இதனால் கடற்கரை யோரம் நிறுத்தி வைத்துள் ளனர். ஒரு சிலர் மட்டும் கடலூர், சிதம்பரம் சென்று டீசல் வாங்கி வந்து கடலுக்கு செல்கின்றனர். மேலும் மானிய விலை டீசலை புரோக்கர்கள் மூலம் அதிகவிலைக்கு விற்பதாக மீனவர்கள் புலம்புகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior