உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


விருத்தாசலம் : 

             தே.கோபுராபுரத்தில் கொளஞ்சியப்பர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சமூக விழிப்புணர்வு பேரணி நடந்தது.
 
                 விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர்களின் கிராம சீரமைப்பு சிறப்பு முகாம் நடந்து வருகிறது. முகாமில் சமூக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதன்மை திட்ட அலுவலர் பேராசிரியர் சிவக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் என்.எஸ்.எஸ்., மாணவர் கள் கலந்து கொண்டு மது ஒழிப்பு, படிப்பின் அவசியம் குறித்த கோஷங்களை எழுப்பி சென்றனர். ஒருங்கிணைப்பாளர் சிவசந்திரபோஸ்,  திட்ட அலுவலர்கள் ராஜசேகர், பாலசங்கு, தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior