உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

மஞ்சள் சாமந்தி பயிரிடுவதில் பண்ருட்டி விவசாயிகள் ஆர்வம்

பண்ருட்டி:

                பண்ருட்டி பகுதியில் மஞ்சள் சாமந்தி பூக்களை விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிட்டு வருகின்றனர்.

                      பண்ருட்டி, அண்ணாகிராம பகுதி விவசாயிகள் முந்திரி, பலா, கொய்யா, மா, எலுமிச்சை, வாழை, சப்போட்டா போன்ற தோட்டப் பயிர்களையும், தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், மிளகாய்,  வெண்டை, கத்திரி, மிளகாய், புடலை, கொத்தவரை, பாகற்காய் போன்ற காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். சில ஆண்டாக குண்டுமல்லி, மல்லி, கனகாம்பரம், ரோஜா போன்ற பூக்கள் பயிரிட்டு வருகின்றனர்.  தற்போது சின்னப் பேட்டை, கீழ்அருங்குணம், நல்லூர்பாளையம், கொங்கராயனூர் உள்ளிட்ட கிராமங்களில் 15 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாமந்தி பூ பயிரிட்டுள்ளனர். தற்போது சாமந்தி பூ சீசன் துவங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பறிக்கும் மஞ்சள் சாமந்தி பண்ருட்டி மார்க்கெட்டில் கிலோ 20 ரூபாயிற்கு மொத்த வியாபாரிகளிடம் விற்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior