உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

பாழடைந்து கிடக்கும் மணம்தவிழ்ந்தபுத்தூர் சுகாதார நிலையம்

பண்ருட்டி:

                   பாழடைந்து வரும் துணை சுகாதார நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர். பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் 30 ஆண்டிற்கு முன் துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் மணம்தவிழ்ந்தபுத்தூர், ஆனத்தூர், நத்தம், பொன்னங்குப்பம், சேமக்கோட்டை, ராயர்பாளையம், பலாப்பட்டு, மேல்அருங்குணம் கிராம மக்கள் மருத்துவ சேவை பெற்று வந்தனர்.

                   இந்நிலையில் சுகாதார நிலையம் பராமரிப்பின்றி பழுதடைந்தது. இதனால் ஊழியர்கள் இங்கு வர அஞ்சினர். இன் காரணாக சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டாக பயன்பாடின்றி புதர் மண்டி பாழடைந்து கிடக்கிறது. நர்ஸ் ஒருவர் மட்டும் புதன் கிழமை தோறும் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். பிற நாட்களில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் பண்ருட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. பாழடைந்து கிடக்கும் சுகாதார நிலையத்தை புதுப்பித்து அனைத்து நாட்களிலும் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior