உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

போலி சான்றிதழ் தயாரித்த மூவர் கைது

சிதம்பரம்:

                 சிதம்பரம் அருகே பள்ளி, கல்லூரிகளின் போலி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்த மூவரை நகர போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சிதம்பரம் பகுதியில் ஒரு கும்பல் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இந்நிலையில் சிதம்பரத்தை அடுத்த லால்பேட்டை சாவடி தெருவைச் சேர்ந்த அக்பர்அலி (34) என்பவர் சி.வீரசோழகன் பகுதிகளைச் சேர்ந்த அசோகன் (42) உள்ளிட்ட கும்பல் போலி மாற்றுச்சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்வதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸôர் விசாரணை மேற்கொண்டு அசோகன் (42), புவனகிரியைச் சேர்ந்த மணிகண்டன் (22), திருப்பணிநத்தம் பகுதியைச் சேர்ந்த முத்துகணேசன் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மூவரிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior