உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

விலை​வாசி உயர்​வைக் கண்​டித்து ​ 11 மையங்​க​ளில் மறி​யல் போராட்​டம்

கட​லூர்:

                            விலை​வாசி உயர்​வைக் கண்​டித்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் 11 மையங்​களில் மறி​யல் போராட்​டம் நடத்த,​​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி மற்​றும் மார்க்சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள் முடிவு செய்து உள்​ளன.​ இவ் ​விரு கட்​சி​க​ளின் ஆலோ​ச​னைக் கூட்​டம் கட​லூ​ரில் அண்​மை​யில் நடந்​தது.​ ​

கூட்​டத்​தில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​ 

                பெட்​ரோல்,​​ டீசல் விலை உயர்வை ரத்து செய்து,​​ ரேஷன் கடை​க​ளில் அனைத்து அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளை​யும் குறைந்த விலை​யில் வழங்கி,​​ ஊக வணி​கத்​தைத் தடை செய்து,​​ விலை​வாசி உயர்​வைக் கட்​டுப்​ப​டுத்த வேண்டும்.​ வேலை நிய​மன தடைச் சட்​டத்தை ரத்து செய்து,​​ அர​சுத் துறை​க​ளில் காலிப் பணி​யி​டங்​களை நிரப்ப வேண்​டும்.​ 100 நாள் வேலைத் திட்​டத்தை நக​ரங்​க​ளுக்​கும் விரி​வு​ப​டுத்த வேண்​டும்.​ ​ மேற்கு வங்க அர​சுக்கு எதி​ரான வன்​மு​றை​க​ளைக் கண்​டித்​தும் ஏப்​ரல் 8-ம் தேதி நாடு முழு​வ​தும்,​​ இட​து​சா​ரிக் கட்​சி​கள் சார்​பில் 25 லட்​சம் பேர் மத்​திய அரசு அலு​வ​ல​கங்​கள் முன் மறிய​லில் ஈடு​பட்டு சிறை​களை நிரப்​பத் தீர்​மா​னித்து உள்​ள​னர்.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் மறியல் போராட்​டம் கட​லூர்,​​ சிதம்​ப​ரம்,​​ பண்​ருட்டி,​​ நெய்வேலி,​​ விருத்​தா​ச​லம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில்,​​ திட்​டக்​குடி,​​ குறிஞ்​சிப்​பாடி,​​ புவ​ன​கிரி,​​ நடு​வீ​ரப்​பட்டு,​​ திரு​முட்​டம் ஆகிய 11 மையங்​க​ளில் நடை​பெ​றும்.​ மறி​யல் கோரிக்​கை​களை விளக்கி 4,5 தேதி​க​ளில் மாவட்​டம் முழு​வ​தும் பிர​சா​ரம் செய்​யப்​ப​டும் என்​றும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்பட்​டன.​ கூட்​டத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் மாவட்​டச் செய​லா​ளர் டி.ஆறு​மு​கம்,​​ ​ இந்​தி​யக் கம்​யூ​னிஸ்ட் மாவட்​டச் செயலா​ளர் டி.மணி​வா​ச​கம் மற்​றும் நிர்​வா​கி​கள் கலந்து கொண்​ட​னர்.​



downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior