உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

சேத்தியாதோப்பில் மனுநீதி நாள் ரூ.1.20 லட்சம் மதிப்பில் உதவிகள்


சேத்தியாத்தோப்பு : 

              சேத்தியாத்தோப்பை அடுத்த அழிச்சிக்குடியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வழங்கல் அலுவலர் வழங்கினார்.

              புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி கிராமத்திலுள்ள உதவி பெறும் துவக்கப் பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைக் கலெக்டர் (பயிற்சி) அழகுமீனா, சிதம்பரம் தாசில் தார் காமராஜ், சமூகநல தாசில்தார் ராமாமிர்தம்  முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ. பழனிச்சாமி வரவேற்றார்.முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான உதவிதொகை, திருமண உதவி தொகை உள்ளிட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் பேசினார். முகாமில் மண்டல துணை தாசில்தார் ரங்கநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாரங்கபாணி, வி.ஏ.ஓ., க்கள் பாண்டியத்துறை, பழனிவேல், சட்டநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளர் ஜெயகுமார் நன்றி கூறினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior