உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததில் 7 பேர் படுகாயம்


சிதம்பரம் : 

                       சிதம்பரம் அருகே நள்ளிரவில் அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததால் டிரைவர் உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். காரைக்காலிருந்து சென்னைக்கு புதுச்சேரி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து வந்த அரசு பஸ் சிதம்பரம் அருகே வேளக்குடி வந்தபோது எதிரில் வந்த டிராக்டருக்கு வழி விட  டிரைவர் பஸ்சை ஒதுக்கினார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வயலுக்குள் பாய்ந்தது. இதில், பஸ் டிரைவர்  விஸ்வநாதன்(55),  பயணிகள் பாண்டியன், தமிழரசி, முனுசாமி, சந்திரன், வேலாயுதம், ராஜேந்திரன் காயமடைந்தனர். இவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். அண்ணாமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior