உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

குமராட்சியில் மருத்துவ முகாம் 20 பேர் மேல்சிகிச்சைக்கு தேர்வு


சிதம்பரம் : 

                சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் நடந்த  குமராட்சி ஒன்றிய அளவிலான மருத்துவ முகாமில் 20 பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நடந்த முதலமைச்சரின்  உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான குமராட்சி ஒன்றிய அளவிலான சிறப்பு முகாமில் மருத்துவ அலுவலர் லலிதா தலைமை தாங்கினார்.

                  டாக்டர்கள் ஐயப்பன், கிருத்திகாதேவி, பிலிப் உள்ளிட்ட குழுவினர் முகாமில் பங்கேற்று நோயாளிகளை சோதனை செய்தனர். இதில்  உயர் சிகிச்சைக்கு தேர்வான  20 நோயாளிகளில், 10 பேர், புதுச்சேரி மணக்குள வினாயகர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனைக்கும், 10 பேர் சென்னை மலர், எம்.எம்.எம், அடையார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அப்போது மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் கைலாஷ், ரவிச்சந்திரன், சரவணன்  உடனிருந்தனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior