உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

வீடுகளுக்கு தீ வைப்பு: இருவர் மீது வழக்கு


கடலூர் : 

               கடலூர் அருகே வீடுகளுக்கு தீ வைத்தது சம்மந்தமாக போலீசார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் அடுத்த நாயக்கநத்தம் காலனியைச் சேர்ந்த அஞ்சம்மாள், பாலாமணி ஆகியோரது கூரை வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த 9,000 மதிப்புள்ள பொருட் கள் எரிந்து சேதமடைந்தது. வீடுகளுக்கு தீ வைத்தது வழிசோதனை பாளையத்தைச் சேர்ந்த பத்மநாபன், குமரேசன் என கூறப்படுகிறது. இது குறித்து அஞ்சம் மாள் கொடுத்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் பத்மநாபன், குமரேசன் மீது வழக்கு பதிவு செய் துள்ளனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior