உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

நெய்வேலி மின்​சா​ரம் முழு​வ​தும் தமி​ழ​கத்​துக்கே!

 சிதம்​ப​ரம்:

                    வேளாண்​மைக்கு தடை​யில்லா மின்​சா​ரம் வழங்க,​​ நெய்வேலி மின்சா​ரம் முழு​வ​தை​யும் தமி​ழ​கத்​துக்கே கேட்​டுப் பெற வேண்​டும் என தமி​ழக அரசை தமி​ழக உழ​வர் முன்​னணி வலி​யு​றுத்​தி​யுள்​ளது.​

இது குறித்து தமி​ழக உழ​வர் முன்​னணி கட​லூர் மாவட்​டச் செய​லர் சி.ஆறுமுகம் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ 

                      ஆள் பற்​றாக்​குறை,​​ விளைப் பொருள்​க​ளுக்கு லாப​மற்ற விலை,​​ கூலி உயர்வு,​​ இந்​திய அர​சின் வேளாண்​மைக்கு எதி​ரான சட்​டங்​கள் ஆகி​ய​வற்​றால் நிலை​கு​லைந்து போயுள்ள விவ​சா​யி​கள் மின்​த​டை​யால் மேலும் அதிர்ந்து போய் உள்​ள​னர்.​ மத்​திய அர​சின் நடு​நிலை தவ​றிய போக்​கால் ஆற்று நீர் சிக்க​லில் நமது தமி​ழ​கத்​தின் உரி​மையை இழந்து நிற்​கும் தமி​ழக விவசாயிகள் நிலத்​தடி நீரை மட்​டுமே நம்பி வேளாண்மை செய்ய வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ள​னர்.​ இதே வேளை​யில் வெளி​நாட்டு பெரும் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு தடை​யில்லா மின்​சா​ரம் தொடர்​கி​றது.​ நாள்​தோ​றும் புதிது,​​ புதி​தாக வெளி​நாட்டு நிறு​வ​னங்​க​ளோடு தமி​ழக அரசு ஒப்​பந்​தம் செய்து கொள்​ளும் வண்​ணம் உள்​ளது.​ இதன்​படி அந்​நி​று​வ​னங்​க​ளுக்கு சலுகை விலை​யில் தடை​யற்ற மின்​சா​ரம் வழங்க உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​ அ​சா​மில் சல​கதி அனல் மின்​நி​லை​யத்​தில் உற்​பத்​தி​யா​கும் 750 மெகா​வாட் மின்​சா​ரம் முழு​வ​தை​யும் அசா​முக்கே வழங்க மத்​திய அரசு முன்​வந்​துள்​ளது.​ த​மி​ழ​கத்​தில் நெய்வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வ​னத்​தில் உற்​பத்​தி​யா​கும் 11 கோடி யூனிட் மின்​சா​ரம் கர்​நா​ட​கத்​துக்கு நாள் தோறும் அனுப்​பப்​ப​டு​கி​றது.​ ஆனால் தமி​ழ​ருக்கு ஒரு சொட்டு நீர் கூட தர​மாட்​டோம் என கர்​நா​ட​கம் கொக்​க​ரிக்​கி​றது.​ 

                    அ​து​போன்று ஆற்​று​நீரை மறிக்​கும் கேர​ளத்​துக்கு 9 கோடி யூனிட் மின்​சா​ர​மும்,​​ ஆந்​தி​ரத்​துக்கு 6 கோடி யூனிட் மின்​சா​ர​மும் நாள்​தோ​றும் நெய்​வே​லியி​லி​ருந்து அனுப்​பப்​ப​டு​கி​றது.​ த​மி​ழ​கத்​தின் கடு​மை​யான மின்​பற்​றாக்​கு​றையை கருத்​தில் கொண்டு அசா​மைப் போல் தமி​ழக அர​சும்,​​ நெய்வேலி மின்​சா​ரம் முழுவதையும் மத்​திய அர​சி​டம்,​​ தமி​ழ​கத்​துக்கே வழங்க வேண்​டும் என கேட்டு பெற வேண்​டும் என்று தமி​ழக உழ​வர் முன்​னணி வலி​யு​றுத்​து​கி​றது என அறிக்கையில் சி.ஆறு​மு​கம் தெரி​வித்​துள்​ளார்.​


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior