உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

நெய்வேலியில் ஆதரவற்ற முதியோருக்கு உதவித்தொகை


நெய்வேலி : 

                நெய்வேலியில் ஆதரவற்ற முதியோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெய்வேலி டவுன்ஷிப், வட்டம்-17ல் உள்ள ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு உதவிடும் வகையில்  6 லட்சத்து 8 ஆயிரத்து 45 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த நிதியை ஹெல்பேஜ் இந்தியா  நிறுவனத்திடம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்றார். 

                 ஜவகர் கல்விக் கழக பொருளாளர் மதிவாணன், ஹெல்பேஜ் இந்தியா உதவி இயக்குனர் சிவக்குமாரிடம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 45 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜார்ஜ் ஜேக்கப், உறுப்பினர் ராமச்சந்திரன், ஆடிட்டர் சந்திரசேகர ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.  ஆதரவற்ற முதியோருக்காக அதிக அளவில் நிதி திரட்டிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior