உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

ஆசிரியர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை

கடலூர் : 

                 கடலூரில் பள்ளி ஆசிரியர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கடலூர் கம்மியம் பேட்டை கெடிலம் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(45). செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ராமலிங்கம் வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ராமலிங்கம் மது அருந்திவிட்டு தூங்கக் சென்றுள்ளதாக தெரிகிறது.  நேற்று காலை வெகு நேரமாகியும் வகுப்புக்கு வராததால் சந்தேகமடைந்த சக ஆசிரியர்கள் அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். மொபைல் அழைப் புக்கு பதில் இல்லாததை கண்டு சந்தேகமடைந்து ஆசிரியர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்த  கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில்  திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சந்தேக பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




Downlaod This Page as PDF

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior