உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் பண மோசடி?

 கடலூர்:

                மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ரூ.12.5 லட்சம் மோசடி செய்ததாக,​​ கடலூர் எஸ்.பி.யிடம் வியாழக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது. 

கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் 5 மகளிர் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் எஸ்.பி.யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது:​

                 குறிஞ்சிப்பாடியை அடுத்த எல்லப்பன்பேட்டையில் 5 மகளிர் சுய உதவிக் குழுக்கள்,​​ குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகின்றன.​ இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளாக முறையாகச் செயல்பட்டு வருகின்றன.​ ​எனவே 6 மாதங்களுக்கு முன்,​​ தொழில் தொடங்குவதற்கான கடனாக அந்த வங்கியில் இருந்து தலா ரூ.​ 2.5 லட்சம் வழங்கப்பட்டது.​ 5 மகளிர் சுய உதவிக் குழுக்களும் தலா ரூ.​ 50 ஆயிரம் கொடுத்தால்,​​ வங்கிக் கடனில் பாதியை மானியமாக மாற்றித் தருவதாக தொண்டு நிறுவன மேலாளர் தெரிவித்தாராம்.​ ​ அதை நம்பிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தலா ரூ.50 ஆயிரம் வழங்கின.​ ​இதற்காக மேலாளர் வழங்கிய ரசீது போலியானது என்று பின்னர் தெரிய வந்தது.​ தொடர்ந்து அவரிடம் கேட்டதற்கு,​​ வங்கி வழங்கிய கடன் தொகையை,​​ மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டாராம். அத்துடன் சுய உதவிக் குழுக்கள் மீது வழக்குத் தொடரப் போவதாகவும் தொண்டு நிறுவன மேலாளர் மிரட்டி வருகிறாராம்.​ இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தருமாறும் மனுவில் கோரி உள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior