உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

கடலூரில் தீ விபத்து கூரை வீடு எரிந்து சேதம்

 கடலூர்: 

                   கடலூரில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. கடலூர் வண்டிப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நேற்று காலை வீட்டில் ண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது அருகில் இருந்த துணியில் தீப்பிடித்து, கூரைக்கும் தீ பரவியது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருந்தும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரித்து வருகின்றன

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior