உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

வெலிங்டன் ஏரிக்குள் புதைந்த கோவில் வளர்வதாக வதந்தி

 திட்டக்குடி: 

                  திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்குள் பல ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த கோவில் கோபுரம் வளர்வதாக ஏற்பட்ட வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரி உள்ளது. இதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த 54 ஆயிரத்து 89 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. 29 அடி வரை நீர்ப்பிடிப்பு செய் யப்பட்ட ஏரியில், தற்போது 800 மீட்டர் வரையிலான வலுவிழந்த கரைப்பகுதியை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

                   இந்நிலையில் ஏரிக்குள் புதைந்து இருந்த நகராயி சுவாமி கோவில் திடீரென வளர்வதாக கிராம மக்களிடையே வதந்தி பரவியது. இதனால் புலிவலம், கீழ்ச்செருவாய், ஐவனூர் கிராம மக்கள் சூடம், ஊதுபத்தி ஏற்றி வழிபட்டு சென்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இன்றைய வெலிங்டன் ஏரி, பல ஆண்டுகளுக்கு முன் புலிவலம் கிராமமாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நீர்த்தேக்கமாக மாற்றப் பட்டதால், கிராம மக்கள் இடம் பெயர்ந்தனர். இதனால் இங்கிருந்த கோவில் நீரில் மூழ்கி பயன்பாட்டிற்கு இல்லாமல் போனது. கோபுரத்தை சுற்றி களிமண் பெயர்ந்து வருவதாக வதந்தி பரவியுள் ளதாக கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior