உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

கைத்தறி கண்காட்சி துவக்கம்


நெய்வேலி: 

            நெய்வேலி டவுன்ஷிப் கோ-ஆப்டெக்ஸ் கோடை கால கைத்தறி கண்காட்சி துவக்க விழா நடந்தது.
 
                  நெய்வேலி டவுன்ஷிப், மெயின் பஜாரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கோடைக்கால கைத்தறி கண்காட்சி மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா கடந்த 16ம் தேதி நடந்தது. கண்காட்சி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. கைத்தறி கண்காட்சி மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை குறிஞ்சிப்பாடி உதவி கல்வி அலுவலர் செலின்மேரி மற்றும் கூடுதல் உதவி கல்வி அலுவலர் தென்றல் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தனர். இந்த ஆண்டு கோடைக்கால கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை முன்னிட்டு புதிய ரக பட்டு, அனைத்து ரக கைத்தறி சேலைகள், சுடிதார், ரெடிமேட் சட்டைகள், போர்வைகள், துண்டுகள் மற்றும் திரைச் சீலைகள் வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மண்டல மேலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேலாளர் ஜெயபால், விற்பனை மேலாளர் சோமசுந்தரம் மற்றும் மேலாளர்கள் கல்யாணசுந்தரம், தேவராசன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior