உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

பண்ருட்டியில் போலி என்ஜின் ஆயில் பறிமுதல்

 பண்ருட்டி:

                பண்ருட்டி கடைகளில் விற்பனை செய்யப்பட்ட போலி காஸ்ட்ரால் ​ என்ஜின் ஆயில்களை அக் கம்பெனி ஊழியர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். பண்ருட்டி நகர பகுதியில் போலி காஸ்ட்ரால் என்ஜின் ஆயில் விற்பனை செய்யப்படுவதாக காஸ்ட்ரால் கம்பெனி நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது.​ இதை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த காஸ்ட்ரால் கம்பெனியின் வணிககுறி அதிகாரி எம்.பி.வி.செழியன் தலைமையில்,​​ குழு ஒருங்கிணைப்பாளர் லெஸ்லிமார்டீன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் பண்ருட்டி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.​

                    10 கடைகளில் சோதனை செய்ததில் 7 கடைகளில் இருந்து 100 லிட்டருக்கு மேல் ​ போலி காஸ்ட்ரால் என்ஜின் ஆயில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பேசிய எம்.பி.வி.செழியன்:​ 

                       பறிமுதல் செய்யப்பட்ட ஆயில்களை ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை பெறப்பட்டவுடன்,​​ காஸ்ட்ரால் பெயரில் போலி என்ஜின் ஆயில் விற்பனை செய்தவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.​ ஆய்வின் போது பண்ருட்டி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior